இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ஸ்பெயினை உலுக்கிய வெள்ளம் – மக்களுக்கு உதவ களமிறங்கிய 10,000 அதிகாரிகள்

ஸ்பெயினில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெலன்சியா நகருக்கு மேலும் 10,000 பொலிஸ் அதிகாரிகளும் படைவீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான வெள்ளப் பேரிடர் அங்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் ஸ்பேனிய அரசாங்கம் வெள்ளப் பேரிடரை முறையாகக் கையாளவில்லை என்று பரவலாகக் குறைகூறப்படுகிறது.

வெள்ளத்தால் மாண்டோர் எண்ணிக்கை 211 க்கு உயர்ந்திருக்கிறது. சுமார் 2000 பேரை இன்னும் காணவில்லை. அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தொடங்கிய கனத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள் பாலங்கள் சேதமடைந்தன; நகரச் சாலைகளில் சேறு படிந்திருக்கிறது. குடியிருப்பாளர்கள் உணவு, குடிநீர், மின்சாரச் சேவை இல்லாமல் தவிக்கின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி