செய்தி வட அமெரிக்கா

FBIக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கனடாவில் கைதான 18 வயது இளைஞர்!

அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் தகவல்களுக்கு அமைய கனடாவில் இளைஞர் ஒருவர் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொன்றியலைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடக் கூடும் என்ற அச்சத்தினால் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மொஹமட் அமீன் அஸால் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் குறித்த நபரை பொலிஸார் பின்னர் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

பாடசாலை தேவைகளை தவிர்ந்த வேறு தேவைகளுக்கு அலைபேசி, கணனி என்பனவற்றை அவர் பயன்படுத்தக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது . GPS ட்ரகிங் கருவியொன்றை குறித்த இளைஞர் அணிந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content