இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் : இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தது ஐக்கிய மக்கள் சக்தி!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரி ஐக்கிய மக்கள் சக்தி வழக்கு தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான இரண்டாம் நாள் விவகாதம் நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற நிலையில் இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  ‘எக்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய நாம் சட்டரீதியான நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

அந்தவகையில் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கமைய குறித்த கப்பல் நிறுவனங்களுக்கு எதிராக கோரிக்கை கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

நம் நாட்டிலுள்ள சில தரப்பினரை பணத்திற்கு விலைக்கு வாங்க முடியும் என்று இந்த கப்பல் நிறுவனங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. பணம் கொடுத்து விலைக்கு வாங்க கூடியவர்கள் எவரும் நம் நாட்டில் இல்லை.நாம் நாட்டை நேசிக்கும் ஒருவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்திற்காக நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் குறித்த கப்பல் நிறுவனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளானது  குறித்த சம்பவத்திற்கான இழப்பீடு தொகையான 6.4 பில்லியன் நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு மிகுந்த பலமாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.

பணம் கொடுத்து வாங்க கூடியவர்கள் நம் தாய்நாட்டில் யாரும் இல்லை என்பதை குறித்த கப்பல் நிறுவனங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content