செய்தி

37000 அடி உயரத்தில் பறந்த போது ஏற்பட்ட அவசர நிலை : லண்டனில் தரையிறக்கப்பட்ட விமானம்!

கிழக்கு மிட்லாண்ட்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட  TUI  விமானம் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில்  அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இன்று (08.06) காலை சுமார் 6.15 மணியளவில் நாட்டிங்ஹாம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஸ்பெயினில் உள்ள பால்மா டி மல்லோர்காவுக்குச் சென்றது.

விமானம் 37,000 அடி உயரத்தில் கடற்கரையை அண்மித்தபோது போது விமானி அவசர நிலையை அறிவித்தார்.

பின்னர் குறித்த விமானமானது லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு உள்ளூர் நேரப்படி சுமார் 7.15 மணிக்கு விமானம் தரையிறங்கியது.

இதனைத் தொடர்ந்து  TOM9BP என்ற அழைப்புக் குறியுடன் ஸ்பெயினுக்கு விமானம் தொடர்ந்து  மல்லோர்காவிற்கு சென்றது.

எவ்வாறாயினும் விமானம் தரையிறங்கியமைக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை.

 

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி