இலங்கை செய்தி

அவுஸ்திரேலியாவில் தொழில் செய்ய காத்திருந்த இலங்கையர்களுக்கு ஏமாற்றம்

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடம் பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, இது தொடர்பான முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பௌவேலிக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இத்தாலி மற்றும் பிரித்தானிய பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை