மட்டக்களப்பில் 11 பிள்ளைகளின் தந்தையின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடலில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கி உயிரிழந்தவர் 11 பிள்ளைகளின் தந்தை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆரியவன்ச விஜயரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர் எனத் தெரியவருகிறது.
அதிக மது போதையுடன் காணப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
காத்ததான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)