ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு – கண்காணிக்கப்படவுள்ள பல்பொருள் அங்காடிகள்

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாக்குப் பிடிக்க முடியாத வகையில் அதிகரித்துள்ளமை தொடர்பில் பல்பொருள் அங்காடி உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் பல்பொருள் அங்காடிகள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

இது தொடர்பில் ஆஸ்ஸ்திரேலிய நுகர்வோர் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜிம் சால்மர்ஸ் கூறுகையில், பல்பொருள் அங்காடிகள் லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக நுகர்வோர் மீது அழுத்தம் கொடுக்கின்றன.

மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்திய அரசின் 23 பில்லியன் டாலர் வாழ்க்கைச் செலவுத் திட்டத்தின்படி எதிர்காலத்தில் மின் கட்டண விலை, குழந்தை பராமரிப்பு செலவு, வீட்டு வாடகை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

மேலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பல்பொருள் அங்காடிகள் தொடர்பான செனட் சபை விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் அசாதாரண விலை உயர்வுகள் எதிர்காலத்தில் கண்காணிக்கப்படும்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித