தேர்தல் சட்டங்களில் மாற்றம் : பொதுமக்களிடம் கருத்து கோர பரிந்துரை!
ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து, பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான குழுவினர் இன்று கூடிய கலந்துரையாடினர்.
இதன்போதே மக்களின் கருத்துக்களை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்தல் மீளாய்வு நடைமுறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் குழுவின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.




