வட அமெரிக்கா

இளைஞர் தொடர்பில் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள கனடா பொலிஸார்

கனடாவின் மாண்ட்ரீல் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் ரொறன்ரோவில் மீட்கப்பட்ட நிலையில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ரொறன்ரோவில் ஞாயிறன்று பகல் வழிபோக்கர் ஒருவரால் 18 வயது ஜாக்ரி ராம்நாத் என்பவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் உள்ளூர் பொலிஸார் தெரிவிக்கையில், ஜாக்ரி ராம்நாத் என்ற இலைஞரை மர்ம நபர்கள் இலக்கு வைத்து கொன்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், 16 வயது ஏசாயா லியோபோல்ட் ரோச் என்ற சிறுவனின் கொலையில் தற்போது ரொறன்ரோவில் சடலமாக மீட்கப்பட்ட ஜாக்ரி ராம்நாதுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்ட்ரீலுக்கு மேற்கு ஏப்ரம் 17ம் திகதி ஏசாயா லியோபோல்ட் ரோச் என்ற சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யார்க் பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில், இந்த இரு இளைஞர்களின் மரணத்திலும் தொடர்பு இருப்பதாக தற்போது உறுதி செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ரோச் கொலை தொடர்பான விசாரணையில் புதிதாக எதுவும் பதிவு செய்ய இல்லை என்று கியூபெக் மாகாண பொலிஸார் புதன்கிழமை தெரிவித்தனர். இதனிடையே, ராம்நாதின் சொந்த மாகாண அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் திரட்டப்படும் என ஒன்ராறியோ அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தங்களின் விசாரணை துவக்க கட்டத்தில் இருப்பதாகவும், மேலதிக தரவுகளை தேடி வருவதாகவும் ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content