இலங்கை செய்தி

பிரித்தானிய இளவரசி ஆனி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரித்தானியா இளவரசி ஆனி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இளவரசி ஆனியுடன் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸும் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டார்.

இதேவேளை, 10 மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று இடம்பெற்றுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் தூதுவர்களிடம் தெரிவித்த ஜனாதிபதி, அந்த நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு வருடங்களில் இலங்கையில் இரத்தினக்கல் தொழிற்துறையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும், அதற்கான புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content