இலங்கை

கனடாவில் இருந்து வருகை தந்த இருவர் மீது மட்டகளப்பில் தாக்குதல்!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டள்ள நிகழ்வுகளுக்காக கனடாவில் இருந்து வருகைதந்திருந்த இருவர் மீது மட்டக்களப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

புனித மிக்கேல் கல்லூரியின்  பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் தலைவர் மற்றும் செயலாளர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 150 வருடத்தை நிறைவுசெய்யும் முகமாக பல்வேறு நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறாக கனடாவில் இருந்து வருகை தந்த இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தாக்குதலுக்கு உள்ளான நபர், இது குறித்து பொலிஸ் நிலையத்திலும், கனடாக   தூதரகத்திடமும் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content