இலங்கை

அமெரிக்கவாழ் இலங்கையர்களைச் சந்தித்த தூதுவர்

அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்றது.

வொஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் ஜூலி சங்,

“இவ்வாரம் நான் மீண்டும் வொஷிங்டனுக்கு வருகைதந்திருக்கின்றேன். இதன்போது முதலாவதாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப்பிரஜைகளைச் சந்தித்தேன். இருநாடுகளுக்கு இடையிலான 75 வருடகால நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – அமெரிக்காவுக்கு இடையிலான 75 வருடகால இராஜதந்திர உறவுகளின் பின்னணியில் இச்சந்திப்பு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்திருப்பதாக அமெரிக்காவிலுள்ள இலங்கைத்தூதரகம் தெரிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content