அறிவியல் & தொழில்நுட்பம்

பெண்களை அச்சுறுத்தும் AI செயலி – ஆபத்தாக மாறும் தொழில்நுட்பம்

கடந்த சில நாட்களாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் மோசமான புகைப்படங்கள் இணையத்திலவெளியாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு உண்மை போலவே இருப்பதால், இதை மக்களும் நம்பி விடுகின்றனர். இதனால் நடிகைகள் முதல் சாதாரண பெண்கள் வரை பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். பெண்களை நிர்வாணமாகக் காட்டுவதற்கு பிரத்தியேகமாக செயலிகள் இருப்பதாகவும் சைபர் கிரைம் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இப்போது உருவாகி இருக்கும் புதிய தொழில்நுட்பம் மூலமாக, ஒரு செயலியில் புகைப்படத்தை அப்லோடு செய்தால் போதும், அவர்கள் அணிந்திருக்கும் ஆடையை நீக்கி நிர்வாணமாக மாற்றிவிடுகிறது அந்த செயலி. இத்தகைய ஆப்களை தற்போது கோடிக்கணக்கான நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இணையத்தில் அதிகப்படியான விளம்பரங்களும் வெப்சைடுகளும் பிரபலமடைந்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் ஆடைகளை மறையச் செய்யும் இத்தகைய வெப்சைட்களை, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும் இந்த ஆப்கள் சார்ந்த விளம்பரங்கள் பல சமூக வலைதளங்களில் வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக ட்விட்டர் எக்ஸ் மற்றும் Reddit போன்ற சமூக ஊடக தளங்களில் பெண்களின் ஆடையை மறையச் செய்யும் ஆப்ஸ் சார்ந்த விளம்பரங்கள், 2400 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் பெரும்பாலும் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டு நிர்வாணமாக மாற்றப்படுகிறது என்பது நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது.

இத்தகைய மோசமான தொழில்நுட்ப வளர்ச்சியால், ஒரு மோசமான காணொளி உருவாக்கி அதில் பல பெண்களின் முகத்தைப் பொருத்தி அதிக எண்ணிக்கையில் ஆபாச படங்கள் உருவாக்கப்பட்டு, இணையத்தில் பகிரப்படுகிறது. இணையத்தில் நாம் பகிரும் புகைப்படங்கள், வீடியோக்களை நம் அனுமதி இல்லாமல் எடுத்து, அவற்றை போலி வீடியோவாக மாற்றி விற்பனை செய்கின்றனர்.

இப்படிதான் சமீபத்தில் பல நடிகைகளின் மோசமான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோக்கள் அனைத்தும் பார்ப்பதற்கு உண்மை போல இருப்பதால், இது எதிர்காலத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. பெண்களை மோசமாகக் காட்டும் செயலிகள் இணையத்தில் எளிதாக கிடைத்துவிடுகிறது என்பதால், இதனால் பல மோசமான விளைவுகளை உலகம் சந்திக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எனவே இனி இணையத்தில் நாம் பார்க்கும் எதையும் நம்ப முடியாது. மேலும், இதுபோன்ற தொழில்நுட்பங்களிடமிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

 

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content