இந்தியா செய்தி

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நடிகை ரோஜா தோல்வி

நாடாளுமன்றத்தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள நகரி தொகுதியில் பிரபல நடிகையும், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசில் மந்திரியாக இருந்தவருமான ரோஜா போட்டியிட்டார்.

கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ந்து 2 முறை போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ரோஜா, ‘ஹாட்ரிக்’ வெற்றிக்காக காத்திருந்தார்.

ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், முதல் சுற்றில் இருந்தே அவர் பின்தங்கியே இருந்தார். இதனையடுத்து அவர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார்.

இதற்கிடையே ரோஜாவை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட பானு பிரகாஷ் 40,687 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!