இலங்கை செய்தி

திருகோணமலையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது வாள்வெட்டு

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

நண்பர்களுடன் பாட்டி ஒன்றிற்கு சென்று வீட்டுக்கு வந்து தனிமையாக உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாதோரினால் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதனையடுத்து உறங்கிக் கொண்டிருந்த போது வாளால் வெட்டிய நிலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொலைபேசி மூலம் சகோதரிக்கு தெரியப்படுத்தியதாகவும் இதனையடுத்து 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வால் வெட்டு தாக்குதலினால் திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த கே.ஜே.எஸ்.பிரசன்ன குமார (27வயது) இளைஞர் காயம் அடைந்துள்ளார்.

தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content