இலங்கை செய்தி

நாடு முழுவதும் திடீர் சுற்றிவளைப்பு – பலர் கைது, வெளிநாடு தப்பிச் செல்விடாமல் தடுக்க நடவடிக்கை

குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்வதற்கான நீதித்துறை நடவடிக்கையில் இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் நபர்களையும் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று நண்பகல் 12.30 மணியுடன் நிறைவடைந்த விசேட அதிரடி நடவடிக்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்த முடியாத நபர்களின் 09 வாகனங்கள் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் கருத்துக்கமைய, குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content