ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தந்தையை ஆதரித்த மாணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை

கொலையில் ஈடுபட்ட நபருக்கு உதவிய குற்றத்திற்காக பாடசாலை மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தெற்கு ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மாணவன் தெற்கு அவுஸ்திரேலிய தனியார் பாடசாலை ஒன்றின் பிரபல மாணவன் என்பதுடன் கொலை வழக்கில் தந்தைக்கு உதவிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் தந்தை தனது சொத்துக்களுக்குள் அத்துமீறி நுழைந்த நபரை கொன்றுள்ளதுடன், தந்தைக்கு உதவிய குற்றத்தை ஒப்புக்கொண்ட மாணவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி, அன்று நடந்ததாகவும், இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாகவும் தெற்கு ஆஸ்திரேலியா பொலிஸார் கூறுகின்றனர்.

அந்த குற்றத்திற்காக அதிகபட்சமாக 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் தொடர்பான உளவியல் அறிக்கையை நீதிமன்றில் வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தனது தந்தையின் செயலுக்கு பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் ஆதரவு தெரிவித்ததற்கு அவரது பள்ளியும் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், இந்த வழக்கு ஜூலை 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content