ஐரோப்பா

ஜெர்மனியில் மாணவர் செய்த அதிர்ச்சி செயல்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே போர் கடந்த 9 நாட்களாக இடம்பெற்று வருகின்றது.

ஜெர்மனி நாட்டில் பலஸ்தீன ஆதரவு மாணவர் ஒருவர் ஆசிரியரை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக சில போராட்டங்களும் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் ஜெர்மனியில் நோயக்கொலின் பிரதேசத்தில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் பாடசாலை அதிபர் ஒருவரை பாடசாலையில் வைத்து தாக்குதலை நடத்தியுள்ளார்.

அதாவது நோயக்கொலின் உள்ள ஜிம்நாசியம் என்று சொல்லப்படும் பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயத மாணவன் பாலஸ்தீனத்துடைய கொடி ஒன்றை பாடசாலைக்கு எடுத்து வந்துளள்ளதுடன் பாலஸ்தீன துணி ஒன்றை உடலில் போத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனை பாடசாலை ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். இவ்வாறு கண்டித்ததால் 15 வயது மாணவர் குறித்த ஆசிரியரை கடுமையாக தண்டித்ததாகவும் தெரியவந்து இருக்கின்றது.

இதனடிப்படையில் தற்பொழுது பொலிஸார் 15 வயது மாணவனுக்கு எதிராக விசாரணையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்