ஆசியா

சிங்கப்பூரில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சிங்கப்பூரில் வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு உதவும் நோக்கில் பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

HSBC, Maybank மற்றும் Standard Chartered ஆகிய வங்கி வாடிக்கையாளர்கள் மோசடியில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மனி லாக் (Money lock) அம்சம் வழங்கப்பட உள்ளது.

இதில் ஒரு வங்கி ஜூன் மாதத்தில் இருந்து இந்த சேவையை வழங்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், DBS, OCBC மற்றும் UOB வங்கிகள் இந்த மனி லாக் (Money lock) அம்சத்தை அறிமுகம் செய்தன.

மோசடி கும்பல் உங்கள் வங்கி கணக்கில் பணத்தை எடுப்பதில் இருந்து இந்த வசதி பாதுகாப்பு அளிக்கும்.

அதாவது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தின் நீங்கள் விரும்பிய தொகையை லாக் செய்து கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள இந்த அம்சம் உதவும்.

அவ்வாறு லாக் செய்த தொகையை வேறு வங்கி கணக்கிற்கோ அல்லது வணிக பரிவர்த்தனைக்கோ கணக்கின் உரிமையாளர் (Account holder) பயன்படுத்த முடியாது.

லாக் செய்த அந்த தொகை மீண்டும் பயன்படுத்த அவர்கள் நேரடியாக வங்கிக்கு அல்லது ATM க்கு தான் செல்ல வேண்டும். அங்கு சென்று அடையாளங்களை உறுதி செய்து பின்னரே பணத்தை எடுக்க முடியும்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content