இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை விரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அது குறித்த நிலைப்பாடு விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணை செயலாளர் நாயகம் அருட்தந்தை டோனி மார்டின்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த முழுமையான விசாரணை அறிக்கை   கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,  குறித்த அறிக்கை இருவட்டுக்களாகவே கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் சட்டத்தரணிகள் குழாம் ஆராய்ந்து வருகிறது.

அறிக்கை முழுமையாக ஆராயப்பட்டதன் பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அது குறித்த எமது நிலைப்பாடுகள் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும்.

தற்போது வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஏனையோர் அறிந்துள்ள உண்மைகள் மாத்திரமே எமக்கும் தெரியும். எனவே எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் எமது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்றார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content