இலங்கை

திருகோணமலையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்து

திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி மிகிந்தபுர பகுதியில் காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து இன்று (11.30) மணியளவில் இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் திருமலையில் இருந்து கன்னியா நோக்கி சென்றுள்ளதாகவும், சம்பாலேன் உள் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்து கொண்டிருந்த சொகுசு காருடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகின்றது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கன்னியா மாங்காயூற்று பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்