ஐரோப்பா

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்காக புதியதொரு சட்டம்

ஜெர்மனியில் புதிய பிரஜா உரிமை சட்டமானது நடைமுறைக்கு வருகின்றது.

ஜெர்மனியில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்காக புதிய பிரஜா உரிமை சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக எஸன் நகரசபையில் உள்ள நகர வெளிநாட்டு அலுவலகம் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.

இவ்வாறு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பிரஜா உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்தால் வருடம் ஒன்றுக்கு 25000 விண்ணப்பங்கள் அதாவது ஜெர்மனிய பிரஜா உரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுவதாக கூறி இருக்கின்றது.

ஜெர்மனிய நாட்டில் குறிப்பாக எஸன் நகரத்தில் பிரஜா உரிமை பெறுவதற்குரிய தொழிற்பாட்டு காலங்களானது 12 தொடக்கம் 18 மாதங்களாகவும், இந்த விடயம் தொடர்பாக 21 அதிகாரிகள் வேலை பார்ப்பதாகவும் கூறி இருக்கின்றார்கள்.

இந்நிலையில் 30 வருடங்களுக்கு முன்னர் வருடம் ஒன்றுக்கு இவ்வாறு ஜெர்மன் பிரஜா உரிமையை பெற்றுக்கொள்கின்றவர்கள் 247 ஆக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்