இலங்கை

குடும்ப பிரச்சினை காரணமாக 9 மாத சிசுவை கிணற்றில் வீசி சென்ற தாய்

மஹாபாகே , ராகம , ஹல்லந்துருவ பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நீரில் மிதந்த நிலையில் 9 மாத பெண் சிசுவின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளது.

ஹலந்துருவ ராகம பகுதியைச் சிசுவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

குறித்த சிசு காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது , தாயே தன் சிசுவை தூக்கி சென்று கிணற்றில் வீசுவது அருகிலிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளமை தெரியவந்துள்ளது .

மேலும் சிசுவின் சடலம் பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹாபாகே பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாகவே, தன்னுடைய சிசுவை அந்த தாய், கிணற்றில் வீசியுள்ளதாகவும், அந்த தாயின் கணவன், வத்தளையில் தொழில்புரிந்து வருவதாகவும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content