ஆப்பிரிக்கா

ஹைதியில் பணியில் ஈடுபட்டிருந்த கென்ய போலீஸ் அதிகாரி ஒருவர் மாயம் : பொலிஸாரை குறிவைத்து தாக்கிய கும்பல்!

ஹைதியில் பணியில் ஈடுபட்டிருந்த கென்ய போலீஸ் அதிகாரி ஒருவர் வன்முறை கும்பல்கள் தாக்கியதை அடுத்து காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா. ஆதரவு பெற்ற பன்னாட்டு பாதுகாப்புப் பணி இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“கும்பல்களால் வேண்டுமென்றே தோண்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும்” பள்ளத்தில் சிக்கிய ஹைதி காவல்துறையினரை மீட்க கென்ய அதிகாரிகள் சென்றுக்கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹைதியில் உள்ள உள்ளூர் ஊடகங்கள், அதிகாரி கொல்லப்பட்டதாகவும், கென்ய சீருடையில் அணிந்திருந்த உயிரற்ற மனிதனின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதாகவும் தெரிவித்தன.

சமீபத்திய ஆண்டுகளில் கரீபியன் நாட்டில் கும்பல் வன்முறை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வீடற்றவர்களாக மாற்றியுள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. துப்பாக்கி ஏந்தியவர்கள் தங்கள் வீடுகளை இடித்த பிறகு பலர் தற்காலிக மற்றும் சுகாதாரமற்ற தங்குமிடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு