இலங்கை செய்தி

ஆசிரியராக நடித்து பெற்றோரிடம் இருந்து பணம் மோசடி செய்யும் கும்பல்

 

ஆசிரியர்களாக நடித்து பெற்றோரிடம் இருந்து பணத்தை ஏமாற்றிய இரண்டு சந்தேக நபர்களை கிரந்துருகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மில்லத்தேவ மற்றும் சுவசக்திபுர பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த பண மோசடி தொடர்பான உண்மைகள் தெரியவந்துள்ளன.

கம்பஹா, ஜாஎல, கந்தானை, பமுனுகம, வீரகுல, பூகொட, பேராதனை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள பாடசாலை மாணவர்களின் பெற்றோரை ஆசிரியர்கள் போன்று ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பெற்றோருக்கு போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தமது பிள்ளைகள் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவசர சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

அதன்படி இருவரும் 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போலியான தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்கும் மோசடி நபர்களிடம் சிக்கவேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content