செய்தி

இலங்கை அமைச்சரவையில் மாற்றம் – பசிலின் கோரிக்கைக்கு ரணில் இணக்கம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொளள்ப்படவுள்ளதாக அரசாங்க  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த தேர்தலை இலக்கு வைத்து இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த திருத்ததத்தின் போது பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனித் தனியாக இருக்கும் நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை காட்டி இந்த திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆரம்ப தவணை பெறப்பட்ட போது கூறப்பட்ட, திறைசேரி அதிக அமைச்சரவை உறுப்பினர்களை பராமரிக்க கூடிய நிலைமைக்கும் வரும் வரை இது நடக்காது என்று கூறப்படுகிறது.

இதேவேளை, இந்த திருத்தங்கள் பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளமையினால், அதற்கு எதிர்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content