இலங்கை

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் பயன்படுத்தப்பட்ட நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் முறையே 19.4 சதவீதம் மற்றும் 5.3 சதவீதம் குறைந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள நிதி மேலாண்மை அறிக்கை கூறுகிறது.

2023 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் கையடக்க தொலைபேசிகளின் இணைய இணைப்புகள் உட்பட இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 21.9 மில்லியனாக உள்ள நிலையில் 1.0 சதவீதம் குறைந்தென அறிக்கை கூறுகிறது.

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இலங்கையில் 100 பேருக்கு 146.9 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தொலைபேசிகள் இருந்தன.

2023 ஆம் ஆண்டில், 100 பேருக்கு 137 கையடக்க தொலைபேசிகள் மற்றும் பிற தொலைபேசிகள் வரை குறைவடைந்துள்ளது. அது 6.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய உபகரணங்களுக்கு VAT விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை 15000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 17 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content