உலகம் செய்தி

ஜெசிந்தா ஆர்டெர்ன் திருமணம் செய்துகொண்டார்

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், தனது நீண்ட கால கூட்டாளியான கிளார்க் கெய்ஃபோர்டை நார்த் தீவில் சிறிய தனியார் விழாவில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடி 2022 இல் திருமணம் செய்துகொள்ள எண்ணியது, ஆனால் ஆர்டெர்னின் அரசாங்கம் நாட்டின் மீது விதித்த கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளின் போது ரத்து செய்யப்பட்டது.

ஆர்டெர்ன் விருந்தினர்களுக்கு ஐந்து நிமிட திருமண உரையை வழங்கினார். இந்த ஜோடி ஒரு தசாப்தமாக ஒன்றாக வாழ்வதுடன், ஐந்து வயது மகள் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே சுமார் 310கிமீ (190 மைல்) தொலைவில் உள்ள நார்த் தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள கிராகி ரேஞ்ச் ஒயின் ஆலையில் உள்ள ஹாக்ஸ் பேயில் திருமணம் நடந்தது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!