ஐரோப்பா

உக்ரைனில் வெடிக்கும் சத்தம் ‘உலகம் முழுவதும்’ கேட்க வேண்டும்: ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வியாழன் மாலை தொடங்கிய சுமார் 18 மணி நேர தாக்குதல், தலைநகர் கீவ் உட்பட ஆறு நகரங்களையும், கிழக்கிலிருந்து மேற்கு உக்ரைன் வரையிலான பிற பகுதிகளையும் தாக்கியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

சுமார் 18 மணி நேர தாக்குதலின் போது ஏராளமானோர் காயமடைந்தனர் மற்றும் அறியப்படாத எண்ணிக்கையிலானவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் உக்ரைன் முழுவதும் உள்ள கட்டிடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை ஆகியவை அடங்கும்.

இந்நிலையில் ரஷ்யாவின் எந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் மட்டுமல்லாது உலக நாடுகளும் தங்கள் எதிர்ப்புகளை வெளியுள்ளனர்.

உக்ரைனின் வெளியுறவு அமைச்சர்

இன்றைய வெடிப்புச் சத்தங்கள் உலகம் முழுவதும் கேட்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியுள்ளார்.

இந்த ஒலிகளுக்கு ரஷ்யா உண்மை சொல்ல வேண்டும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

உக்ரைனின் ஜனாதிபதி

ரஷ்யா ஒரே இரவில் சுமார் 110 ஏவுகணைகளை தாக்குதல்களைத் தொடர்ந்து “ரஷ்ய பயங்கரவாதம் கண்டிப்பாக தோற்கடிக்கப்படும்” என்று உக்ரைனின் ஜனாதிபதி X இல் பதிவிட்டுள்ளார்.

பிரித்தானியா எச்சரிக்கை

இரவோடு இரவாக ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் அலையைத் தொடர்ந்து பிரித்தானியப் பிரதமர் உக்ரைனுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் .

உக்ரைன் மீதான ரஷ்யாவின் பாரிய தாக்குதலானது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஒழிக்கும் தனது இலக்கை அடைவதற்கு ஒன்றும் செய்யமாட்டார் என்பதை காட்டுகிறது

அவரை ஜெயிக்க விடமாட்டோம். நாங்கள் உக்ரைனுடன் தொடர்ந்து நிற்க வேண்டும். அது போராடும் வரை, என்று பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

ஜெர்மன்

உக்ரைனின் இராணுவம் வெற்றியடைந்து வருவதாகவும் ரஷ்யா பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் ஜெர்மன் இராணுவ ஆலோசகர் கூறுயுள்ளார்.

“உக்ரைனில் எண்பது சதவீதம் இன்னும் சுதந்திரமாக உள்ளது… ரஷ்ய கருங்கடல் கடற்படை மேற்கு கருங்கடலில் இருந்து வெளியேற்றப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் ரஷ்ய போர்க்கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அவர் குறிப்பிட்டார், இது கடலில் இருந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தும் ரஷ்யாவின் திறனைக் குறைத்துள்ளது என்று சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும் மாஸ்கோவிற்கு எதிராக “தடுப்பை” எவ்வாறு பராமரிப்பது என்பதை மேற்கத்திய நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content