மத்திய கிழக்கு

இஸ்ரேலுக்கு ரகசிய தகவல் வழங்கிய பாலஸ்தீனியர்கள் இருவரை கொலைசெய்து கம்பத்தில் தொங்கவிட்ட ஆயுதக்குழு

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கொடுத்ததாக பாலஸ்தீனியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதியில் இருந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நடந்து வருகிறது.இதுவரை காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14,800 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு ரகசிய தகவல் அளித்ததாக பாலஸ்தீனியர்கள் இருவர் ஆயுதமேந்திய குழுவால் தாக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் (IDF) பணிபுரிந்ததாக அந்த வீடியோவில் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் கொல்லப்பட்டு மின்கம்பத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளனர்.எனினும் ஹமாஸ் அல்லது IDF மரணதண்டனை பற்றி முறையான அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!