தெதுறு ஓயாவின் வான் கதவுகள் திறப்பு!

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயாவின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் தற்போதைய நீர் கொள்ளளவை விட அதிக நீர் கொள்ளளவை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெதுரு ஓயா நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் நீர்த்தேக்கத்தின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் விராஜ் திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
(Visited 17 times, 1 visits today)