இலங்கை

மீண்டும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட வர்த்தகர் ஷாப்டரின் சடலம்…

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (04) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் சடலம் கையளிக்கப்பட்டது.

பொரளை பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ஷாப்டரின் சடலம் கடந்த மே மாதம் 25ம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐந்து நிபுணர்கள் அடங்கிய சட்ட வைத்திய அதிகாரிகள் குழு முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.மர்மமாக இருந்த அவரது மரணத்தின் உண்மையை உறுதிப்படுத்துவதற்காக சடலம் எடுக்கப்பட்டு மீண்டும் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்தது.

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை விபத்து இடம்பெற்ற முதல் நாளிலேயே கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்ததுடன், கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தமேற்பட்டதன் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் உத்தரவிட்டுள்ளது.

அதன் பின்னர், தினேஷ் ஷப்டரின் சடலத்தை கராப்பிட்டிய வைத்தியசாலையின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி இன்று (04) காலை அவரது உறவினர்கள் வந்து சடலத்தை ஏற்றுக்கொண்டனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!