இலங்கை

இலங்கையில் கைவிடப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள் – இஸ்லாமபாத் பகுதியில் சம்பவம்

சுனாமி அனர்த்தம் காரணமாக மக்களினால் கைவிடப்பட்டுள்ள வீடுகளில் அண்மைக்காலமாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக பகுதி முழு அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் இவ்வாறு சமூக சீர்கேடுகள் இடம்பெற்ற அடையாளங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக வெளியிடங்களில் இருந்து வருகின்ற சிலரின் சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் பாவனை பாலியல் செயற்பாடுகளுக்கு இவ்விடங்கள் உடந்தையாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் குறித்த பகுதியில் இயங்கி வருகின்ற காதி நீதிமன்றத்தை சுற்றி காணப்படுகின்ற வீடுகள் யாவும் கைவிடப்பட்டு சுமார் 19 வருடங்களாக காடு மண்டி காணப்படுகின்றது.

குறித்த இவ்வாறான வீடுகளில் உள்ள அறைகளில் அரைகுறையாக பெண்களின் உள்ளாடை ஆண்களின் உள்ளாடை என்பன சிதறி காணப்படுகின்றன.

போதைப்பொருள் நுகர்ந்த இடமாகவும் இவ்வாறான வீடுகளில் அடையாளங்கள் தென்படுகின்றன

அத்துடன் விச ஜந்துக்கள் விசப்பாம்புகளின் வாழிடங்களாகவும் இவ்வீடுகள் காணப்படுவதுடன் எவ்வித பாதுகாப்பற்ற இடமாகவும் விளங்குகின்றது.

இவ்வாறான கைவிடப்பட்ட வீடுகள் உரிய பராமரிப்புக்கள் இன்மையினால் அதன் அருகில் குடியேறி வாழும் மக்கள் கூட அச்சுறுத்தலினால் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்வீடுகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!