ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி!! ஐந்து லட்சம் ரூபா நட்டஈடு

ஹொரபே புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்த கம்பஹா மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் தினித் இந்துவர பெரேராவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாவை வழங்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறான விபத்து தொடர்பில் நட்டஈடு வழங்குவதற்கு சட்ட ரீதியாக எவ்வித அடிப்படையும் இல்லை என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், போக்குவரத்து அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, அமைச்சரவை அங்கீகாரத்திற்கு உட்பட்டு, உயிரிழந்த இளைஞனின் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)