இலங்கை

தடுப்பூசி விஷமானதில் நான்கு மாத குழந்தை உயிரிழப்பு!

வெலிகம – நலவன பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக்குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி விஷமானமையே இறப்புக்கான காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த தடுப்பூசியானது கடந்த 2 ஆம் திகதி இக் குழந்தைக்கு  வெலிபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, குழந்தைக்கு ஏற்பட்ட கடும் குளிர் காரணமாக 05ம் திகதி இமதுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிலமை மோசமானதன் விளைவாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே இறந்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஏற்றப்பட்ட தடுப்பூசி விஷம் அடைந்தமையாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தடுப்பூசி விஷமடைந்திருந்தால் குறுகிய காலப்பகுதிக்குள் மரணம் இடம்பெற்று இருக்க வேண்டும். எவ்வாறாயினும், பிரேத பரிசோதனைகளுக்காக பிறகே மரணத்துக்கான காரணத்தை உறுதியாக கூறலாம் என சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

(Visited 16 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content