இலங்கை

முத்துராஜா யானைக்கு சிகிச்சையளிக்க விசேட குழு தாய்லாந்து பயணம்!

இலங்கையிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட முத்துராஜா என்ற யானைக்கு சிகிச்சையளிக்கும் பணியில் இணைந்து கொள்வதற்காக, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் வைத்தியர்கள் குழாம் ஒன்று தாய்லாந்துக்கு சென்றுள்ளது.

தாய்லாந்து அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்தக் குழாம் அந்த நாட்டுக்கு பயணமாகியுள்ளது.

இந்தக் குழாமில் விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் விலங்குகள் நலப் பணிப்பாளரான கால்நடை வைத்தியர் சந்தன ராஜபக்ஷ, கால்நடை வைத்தியர் மதுஷா பெரேரா மற்றும் சிரேஷ்ட விலங்குகள் பாதுகாவலர் நந்துன் அத்துலத்முதலி உள்ளிட்டோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்துராஜா யானை 2001 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அதற்கிணங்க, சுமார் 22 வருடங்களாக முத்துராஜா யானை அளுத்கம கந்தே விஹாரையின் பொறுப்பிலிருந்தது.

அழகிய தந்தங்களை கொண்ட முத்துராஜா யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் அதனை மீளவும் தமது நாட்டிற்கு அழைத்துச் செல்வதாக தாய்லாந்து அரசு அறிவித்திருந்தது.

அதன்படி முத்துராஜா யானை கடந்த ஜூலை மாதம் 02ஆம் திகதி தாய்லாந்து நோக்கி அழைத்து செல்லப்பட்டது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content