முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள் – பேராயர் கர்தினால்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமானால் பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் விருப்பத்தை பெற வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ராகம பகுதியில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “எங்கள் நாட்டின் துண்டுகளை வெவ்வேறு நாடுகளுக்கும் படைகளுக்கும் விற்று, இந்த நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்ல பல்வேறு முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)