அமெரிக்க தூதுவருடன் யால தேசிய பூங்காவிற்குச் சென்ற ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (19) யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்தார்.
யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை வீதியூடாக பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
வறண்ட காலநிலையினால் வற்றிப்போன நீர் கிணறுகளுக்கு நீர் வழங்கும் நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
யால தேசிய பூங்கா இலங்கையின் பழமையான பூங்காக்களில் ஒன்றாகும், மேலும் இலங்கைப் புலிகளை (பாந்தெரா பார்டஸ் கொடியா) மிகச்சிறிய பகுதியில் நீங்கள் காணக்கூடிய இடமாகும்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் மற்றும் காணி மற்றும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
(Visited 11 times, 1 visits today)