இலங்கை செய்தி

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சுமார் 8000இல் இருந்து 4000 ஆக குறைப்பதற்கான யோசனை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான ஐவரடங்கிய எல்லை நிர்ணய குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்யவும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குழு நியமிக்கப்பட்டது.

இது தொடர்பான வர்த்தமானியை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டார்.

இந்தக் குழுவில் மஹிந்த தேசப்பிரியவுக்கு மேலதிகமாக ஜயலத் ஆர்.வி.திஸாநாயக்க டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரிஇ கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு இன்று காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் அறிக்கையை கையளித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)
See also  Women's T20 WC - இந்தியாவின் உலக கோப்பை கனவை பறித்த நியூசிலாந்து
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content