இலங்கை செய்தி

மாமனாரின் தாக்குதலில் உயிரிழந்த இளம் தந்தை – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி  , கிருஸ்ணபுரம் பகுதியில்  இரண்டு பிள்ளைகளின்   தந்தை  ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்த 32 வயதான  குறித்த நபா்  இன்று முற்பகல் மனைவியை பார்க்கச் சென்ற போது  அவருக்கும் அவரது   மாமனாருக்கும் இடையில்  ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து,  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தொிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான குறித்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக  விசாரணைகளை கிளிநொச்சி தலைமையக  பொலிசார்  முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை