பிரான்ஸில் 3வது தளத்தில் இருந்து தவறி விழுந்து அதிஷ்டவசமாக உயிர்பிழைத்த சிறுவன்

பிரான்ஸில் 2 வயதுடைய சிறுவன் ஒருவன் மூன்றாவது தளத்தில் இருந்து தவறி விழுந்து அதிஷ்டவசமாக உயிர்பிழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை காலை Brétigny-sur-Orge (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது.
இங்குள்ள கட்டிடம் ஒன்றின் மூன்றாவது தளத்தில் வசிக்கும் குறித்த இரண்டு வயதுச் சிறுவன் ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார்.
சிறுவனது தாய் குளித்துக்கொண்டிருக்கும் போது, அவர் கவனிக்காத வேளையில் சிறுவன் ஜன்னல் வழியாக வெளியே விழுந்துள்ளார்.
மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவன் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக துரிதமாக செயற்பட்ட மருத்துவக்குழுவினருக்கு நகரபிதா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)