பொழுதுபோக்கு

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் யார் தெரியுமா?

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மீடியா மற்றும் தொலைக்காட்சி நிறுவனமாக இருக்கும் சன் டிவி நெட்வொர்க்-ன் நிறுவனர் மற்றும் உயர்மட்ட நிர்வாக அதிகாரியாக இருக்கும் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் ஒவ்வொரு வருடமும் ஒரே அளவிலான சம்பளத்தை பெற்று வருகின்றனர்.

இப்படி 2012 ஆம் நிதியாண்டில் கலாநிதி மாறன் 57 கோடி ரூபாயை சம்பளமாக பெற்ற நிலையில் காவேரி கலாநிதி-யும் 57 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றார்.

இதேபோல் 2021 ஆம் நிதியாண்டில் 87.50 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளனர்.

இதன் மூலம் 2012 முதல் 2021 வரையிலான காலக்தட்டத்தில் கணவன் – மனைவி ஜோடி சுமார் 1470 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் பெண் உயர் அதிகாரியாக உள்ளார் காவேரி கலாநிதி. கடந்த 10 வருடத்தில் காவேரி கலாநிதி மாறன் சுமார் 735 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ள நிலையில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 6.1 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.

சமீபத்தில் கலாநிதி மாறன் – காவேரி கலாநிதி மாறன் அவர்களின் மகள் காவ்யா-வும் சன் டிவி நெட்வொர்க் நிர்வாக பணிகளிலும், ஐபிஎல் போட்டிகளின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாக பணிகளிலும் ஈடுப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!