உலகம் செய்தி

அணு ஆயுதம் குறித்து 2ஆம் சுற்றிலேயே பேச்சு!

அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று (16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைகள் இரண்டு முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டு, முதல் கட்டத்தில் ஹார்முஸ் நீரிணை விவகாரம் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும்.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் அணுசக்தி விவகாரங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பான இறுதிக் கட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி