AIஐக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் போதுமானதாக இல்லை – பேராயர் அதிருப்தி!
செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும் தற்போதைய விதிமுறைகள் முற்றிலும் போதுமானதாக இல்லை என கேன்டர்பரி பேராயர் டேம் சாரா முல்லாலி (Dame Sarah Mullally) தெரிவித்துள்ளார்.
“பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை சாட்பாட்கள் இப்போது எளிதாக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டர்ஹாம் பல்கலைக்கழக அறிக்கையை மேற்கோள் காட்டி, சாட்பாட்கள் கற்பழிப்பு மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பாத்திரமேற்புகளை எளிதாக்குகின்றன என்ற கவலைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பாதிப்புகள் பயனர்களின் தவறான பயன்பாட்டினால் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு தளங்களின் வடிவமைப்புத் தேர்வுகள் மற்றும் நிர்வாகத் தோல்விகளாலும் ஏற்படுகின்றன என்று பேராயர் எடுத்துரைத்தார்.





