ஐரோப்பா

நெதர்லாந்தில் போதைமருந்து கொடுக்கப்பட்டு பல பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்!

நெதர்லாந்தில் போதைமருந்து கொடுக்கப்பட்டு பல பெண்கள்  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட  சம்பவம் பூதாகாரமாக வெடித்துள்ள நிலையில், 04 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் வீடுகளில் இருந்து கணினிகள், தொலைபேசிகள் மற்றும் தரவு சேமிப்பு சாதனங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இந்த வழக்கில் இன்னும் நிறையபேர் கைது செய்யப்படலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் உள்ள பல பெண்களுக்கு, அவர்களின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள ஒருவரால் போதை மருந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

டச்சு தனியுரிமை விதிகளுக்கு இணங்க சந்தேகநபர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

மேற்படி சந்தேகநபர்களால் எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை  அறிய விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்