டெல்லியில் பற்றி எரிந்த உணவகம் : 20 பேர் உயிரிழப்பு!
டெல்லியில் பிரபல உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் ஏறக்குறைய 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த தீவிபத்து இன்று அதிகாலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை 04 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏறக்குறைய 08 பேர் சிசிக்சைக்காக அனுப்பட்டுள்ளதாகவும் டெல்லி மாநகராட்சி (DDMA) துணை மாவட்ட ஆட்சியர் (SDM) ஜிதேந்திர குமார் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஏற்பட்ட தீ பின்னர் மேல் தளங்களுக்கும் பரவியதாக கூறப்படுகிறது.
தீவிபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.





