காங்கோவில் விமான நிலையம் திறப்பு – பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!
எபோலா நோய் பரவல் காரணமாக மூடப்பட்ட விமான நிலையத்தை காங்கோ ஜனநாயகக் குடியரசு மீண்டும் திறந்துள்ளது.
இடுரி மாகாணத்தின் முக்கிய விமான நிலையமான புனியா விமான நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீள திறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையம் மனிதாபிமான பொருட்கள் மற்றம் மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் தொடங்க” தற்போது நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீளவும் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்துப் பயணிகளுக்கும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் வந்தடைந்த பின்னரும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் என்றும், பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு கைகளைக் கழுவ வேண்டும் என்றும், காய்ச்சல் உள்ள எந்தப் பயணியும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.





