ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அழைப்பு!
ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள கிர்கிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஜீன்பெக் குலுபாயேவ் (Jeenbek Kulubaev), அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து அதிக பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கும் வகையில் இந்த சீர்த்திருத்தம் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டால், தனது நாடு ஒரு பாலமாகச் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் கிர்கிஸ்தானின் உறுப்புரிமை நிரந்தரமற்றதாகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
“சர்வதேச சட்டம், நாடுகளின் இறையாண்மை சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் உள் விவகாரங்களில் தலையிடாமை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஐ.நா.வின் மைய ஒருங்கிணைப்புப் பங்கை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
ஐ.நா. பாதுகாப்பு சபை ஒரு மூடிய அமைப்பாகக் கருதப்படக்கூடாது என்றும், அதன் முடிவுகள் அனைத்து நாடுகளின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குலுபாயேவ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐ.நா. பொதுச் சபை 1993 முதல் சீர்திருத்தம் குறித்து விவாதித்து வருகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக முறையான பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை.
ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் ஆப்பிரிக்கா ஏறக்குறைய 25 சதவீதமாக இருந்தபோதிலும், 15 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவிற்கு நிரந்தர இடங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.





