கென்யாவில் போராட்டத்தில் நான்கு பேர் உயிரிழப்பு – போராட்டத்தை கைவிட தீர்மானம்!
கென்யாவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் கலந்தாலோசனை நடத்துவதற்காக ஏதுவாக தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி போராட்டத்தின்போது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் சட்டவிரோதப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக 348 பேர் கைது செய்யப்பட்டனர்.
கென்யாவில் டீசல் விலை 23.5% அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை 8 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. விலை உயர்விற்கு ஈரான் போரே காரணம் என அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
ஆனால் அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளே காரணம் என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.




