இலங்கை

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணப்பரிவர்த்தனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 மே மாதத்தில் இலங்கை பணியாளர்களின் பணம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி – மே 2023) மொத்த எண்ணிக்கை USD 2,346.9 மில்லியன் ஆக பதிவாகியுள்ளது.  இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது   75.7 சதவீதம் அதிகமாகும்.

விரிவடைந்து வரும் வர்த்தகப் பற்றாக்குறைக்கு எதிராக கணிசமான தலையீட்டை வழங்குவதுடன், அதன் மூலம் நாட்டின் வெளித் துறையின் மீள்தன்மையை மேம்படுத்த உதவியாகவுள்ளது எனத் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு நாணய வருவாயின் முக்கிய தூணாக தொழிலாளர்களின் பணம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content